ஒட்டன்சத்திரம் அருகே திருமணமான 11 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பண்ணைப்பட்டியைச் சேர்ந்தவர் பிரம்மசாமி. விவசாயி. இவரது மகள் முத்துலெட்சுமி (வயது 24) இவருக்கும், பட்டைய கவுண்டன்புதூரைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவருக்கும், கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
லெட்சுமணன் ராணுவத்தில் புணிபுரிந்து வருகிறார். பொங்கலுக்காக தனது மகளை பிரம்மசாமி வீட்டுக்கு அழைத்திருந்தார். நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த முத்துலெட்சுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முத்துலெட்சுமியின் சகோதரர் பிரகாஷ் கன்னிவாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரில், முத்துலெட்சுமியிடம் லெட்சுமணன் பெற்றோர் ரூ.2 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகை கொண்டு வந்தால்தான் வாழ முடியும் என கூறியுள்ளனர். மேலும் கணவர் லெட்சுமணனும் வரதட்சணை கேட்டு மிரட்டியுள்ளார்.
அதனால்தான் முத்துலெட்சுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 11 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.