செய்திகள்
கொள்ளை

ஆரல்வாய்மொழி அருகே கடை மேல்கூரையை உடைத்து ரூ.27 ஆயிரம் கொள்ளை

Published On 2020-01-19 17:09 GMT   |   Update On 2020-01-19 17:09 GMT
ஆரல்வாய்மொழி அருகே கடை மேல்கூரையை உடைத்து அங்கு இருந்த ரூ.27 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

நாகர்கோவில்:

ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன் புதூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் முத்து (வயது 30). இவர், அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஷோபனா, (29). இவர், ஆரல்வாய்மொழியில் உள்ள நூற்பாலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

முத்துவின் தாயார் மாரியம்மாளும், இவர்களுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முத்து, அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றார். ஷோபனாவும் நேற்றிரவு நூற்பாலைக்கு இரவு பணிக்கு சென்றிருந்தார்.

வீட்டில் மாரியம்மாளும், குழந்தைகளும் இருந்தனர். இன்றுகாலை மாரியம்மாள் கடையை திறப்பதற்காக சென்றார். கடையை திறந்த போது, கடையையொட்டி இருந்த கழிவறையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. அதன் வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள், கடையில் இருந்த ரூ.27 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றிருந்தனர். 

இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளையடிக்கப்பட்ட ரூ.27 ஆயிரம் ரொக்கப்பணமும் சுய உதவிக்குழுக்களில் இருந்து பிரித்து வைக்கப்பட்ட பணம் ஆகும். பணம் கடைக்குள் இருப்பதை தெரிந்தே மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் முத்துவிற்கு நன்கு பழக்கப்பட்டவர்களே இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக சந்தேகப்படும் நபர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஆரல்வாய் மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News