செய்திகள்
விபத்து

கொட்டாம்பட்டி அருகே கார் மோதியதில் முதியவர் பலி

Published On 2020-01-17 08:40 GMT   |   Update On 2020-01-17 08:40 GMT
கொட்டாம்பட்டி அருகே கார் மோதியதில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலூர்:

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக் குடியை அடுத்த ஒட்டக்கோவில் பட்டியைச் சேர்ந்தவர் சம்பத் அடைக்கண் (வயது 66). இவர் கருங்காலக்குடி சென்று விட்டு சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது 4 வழிச்சாலையில் திருச்சியில் இருந்து மேலூர் நோக்கி கார் வேகமாக வந்தது. அந்த கார் சைக்கிள் மீது மோதியதில் சம்பத் அடைக்கண் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சுங்கச்சாவடி மீட்பு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் மீட்பு வாகனம் விரைந்து சென்றது. அந்த வாகனத்தில் சம்பத் அடைக்கண் கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சம்பத் அடைக்கண் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News