செய்திகள்
பூதலூர் அருகே ஊராட்சி பணியாளரை தாக்கியவர் கைது
பூதலூர் அருகே ஊராட்சி பணியாளரை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூதலூர்:
பூதலூர் அருகே உள்ள முத்தாண்டிப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அற்புதசகாயராஜ் (வயது55). முத்தாண்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவராக பணி செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் அங்குள்ள டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த போது அதே ஊரைச் சேர்ந்த சார்லஸ்(41) என்பவர் அற்புதசகாயராஜை திடீரென்று தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பூதலூர் போலீசில் அற்புதசகாயராஜ் புகார் செய்தார். பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து சார்லசை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.