செய்திகள்
கோப்பு படம்

மதுரை மாடக்குளம் கண்மாயில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி

Published On 2020-01-12 13:00 GMT   |   Update On 2020-01-12 13:00 GMT
மதுரை மாடக்குளம் கண்மாயில் குளிக்க சென்ற 15 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

மதுரை:

மதுரை பொன்மேனி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகமதுராஜா. இவரது மகன் முகமதுபயாஸ் (வயது15). இவர் சம்பவத்தன்று மாலை மாடக்குளம் கண்மாய்க்கு குளிக்க சென்றார்.

கண்மாயில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று சிக்கியதாக தெரிகிறது. அங்கிருந்து முகமது பயசால் கரைக்கு திரும்ப முடியவில்லை. சிறிது நேரம் தத்தளித்த அவர் கண்மாயில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

குளிக்க சென்ற மகன் நீண்ட நேரமாகியும் வராததால் பெற்றோர் அவரை தேடினர். அப்போது கண்மாயில் மூழ்கி முகமது பயாஸ் இறந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்த எஸ்.எஸ்.காலனி போலீசார் சம்பவ இடம் வந்து சிறுவனை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News