செய்திகள்
கைது

கோவை அருகே சொந்த வீட்டிலேயே நகை திருடியவர் கைது

Published On 2020-01-10 10:21 GMT   |   Update On 2020-01-10 10:21 GMT
கோவை அருகே சொந்த வீட்டிலேயே நகை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.

கோவை:

கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி ஜெயா (26). கூலித் தொழிலாளி. இவர் தனது அக்காளின் ஒன்றே முக்கால் பவுன் செயின், அரைபவுன் மோதிரம்-2 ஆகியவற்றை வாங்கி வீட்டில் வைத்து இருந்தார். சம்பவத்தன்று அவர் வீட்டை விட்டு வெளியே சென்று இருந்தார்.

பின்னர் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த நகை திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த நகையை ஜெயாவின் கணவர் ராஜேஷ் குமார் தான் திருடியது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News