செய்திகள்
தொழிலாளி மீது தாக்குதல்

தேனி அருகே முன் விரோதத்தில் தொழிலாளி மீது தாக்குதல்

Published On 2020-01-08 08:45 GMT   |   Update On 2020-01-08 08:45 GMT
தேனி அருகே முன் விரோதத்தில் தொழிலாளி தாக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் தர்மர் (வயது49) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுதர்சன் என்பவருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று டாஸ்மாக் கடையில் மது குடித்துக்கொண்டிருந்த தர்மரை சுதர்சன் தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். இதை தட்டிக்கேட்ட தர்மரை பாட்டிலால் தாக்கி உள்ளார். இது குறித்து கோம்பை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டொம்புசேரியை சேர்ந்தவர் சிவக்குமார் (31). அதே பகுதியில் நடந்து சென்றபோது கனி என்பவர் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இதை தட்டிக்கேட்ட சிவக்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து பழனிசெட்டிபபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News