செய்திகள்
தொழிலாளர்கள் போராட்டத்துக்கு ம.தி.மு.க. ஆதரவு- வைகோ
வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ள அகில இந்திய அளவில் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ம.தி.மு.க. முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதாக வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைவருக்கும் வேலை, விலைவாசியை கட்டுப்படுத்துதல், அனைவருக்கும் ஓய்வூதியம், பொது நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்ககூடாது. முதலாளிகளுக்கு ஆதரவாக சட்டங்களை மாற்றக்கூடாது. குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக வருகிற 8-ந்தேதி அகில இந்திய அளவில் தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு ம.தி.மு.க. முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைவருக்கும் வேலை, விலைவாசியை கட்டுப்படுத்துதல், அனைவருக்கும் ஓய்வூதியம், பொது நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்ககூடாது. முதலாளிகளுக்கு ஆதரவாக சட்டங்களை மாற்றக்கூடாது. குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக வருகிற 8-ந்தேதி அகில இந்திய அளவில் தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு ம.தி.மு.க. முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.