செய்திகள்
போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

கள்ளக்குறிச்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்த ஆலோசனை கூட்டம்

Published On 2020-01-03 16:14 GMT   |   Update On 2020-01-03 16:14 GMT
கள்ளக்குறிச்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் கிரண்குராலா தலைமையில் நடந்தது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிற 19-ந்தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதனையொட்டி அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புகுழு ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்தினி, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் கிரண்குராலா பேசும்போது, வருகிற 19-ந்தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து போடவேண்டும். முகாம் நடைபெறும் இடங்களுக்கு வாகன வசதி, மின்சாரம் வசதி செய்வதை முன்கூட்டியே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News