செய்திகள்
கோவையில் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை
கோவையில் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை போத்தனூருக்கும், இருகூருக்கும் இடையே உள்ள ரெயில் தண்டவாள பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை போத்தனூருக்கும், இருகூருக்கும் இடையே உள்ள ரெயில் தண்டவாள பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.