செய்திகள்
தற்கொலை

கரூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

Published On 2019-12-29 18:11 GMT   |   Update On 2019-12-29 18:11 GMT
கரூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்:

கரூர் பாரதிநகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 37). தனியார் நிறுவன ஊழியர். இவர், ஜோதிடர்களிடம் சென்று ஜாதகம் பார்த்து அதன் வழி நடப்பதில் தீவிரமாக இருந்தார். இந்த நிலையில் உனக்கும், உனது மகனுக்கும் தற்போது நேரம் சரியில்லை என ஜோதிடர் ஒருவர் குணசேகரனிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட இவர், தனது குடும்பத்தினரிடம் கூறி ஆதங்கப்பட்டு வந்தார். எனினும், ஜாதகத்தை பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள்... என குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான குணசேகரன், ஆத்தூரில் உள்ள பழைய பள்ளி கட்டிடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, குணசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Tags:    

Similar News