செய்திகள்
மரணம்

பல்லடத்தில் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலி

Published On 2019-12-27 10:05 GMT   |   Update On 2019-12-27 10:05 GMT
பல்லடத்தில் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி(வயது40). இவர் பல்லடம் கரையான்புதூரில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று பல்லடம் அண்ணாநகரில் வேலை பார்த்து வரும் தனது நண்பர் முருகனை பார்க்க சென்றார். முருகன் அந்த பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டித்தின் 2-வது மாடியில் வேலை பார்த்தார். இதையடுத்து முனியாண்டி மாடிக்கு படியில் ஏறி சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக முனியாண்டி தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த முனியாண்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News