செய்திகள்
கைது

பொள்ளாச்சியில் போலீஸ்காரரை மிரட்டிய வாலிபர்கள் கைது

Published On 2019-12-23 09:30 GMT   |   Update On 2019-12-23 09:30 GMT
பொள்ளாச்சியில் போலீஸ்காரரை மிரட்டிய வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் மாவட்ட கல்வி அலுவலகம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு 2 வாலிபர்கள் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர்.

அதை பார்த்த போலீஸ்காரர் விக்னேஷ் அவர்களிடம் பொது இடத்தில் மது குடிக்க கூடாது என எச்சரித்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி விக்னேசை மிரட்டினர். இது குறித்து அவர் பொள்ளாச்சி மேற்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாலிபர்கள் பொள்ளாச்சி ஊத்துக்குளியை சேர்ந்த அருள்பிரகாஷ் (வயது 26) டிரைவர் மற்றும் ஜெய கோகுல கிருஷ்ணன் (வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News