செய்திகள்
விபத்து

ஆண்டிப்பட்டி அருகே காய்கறி வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்

Published On 2019-12-21 10:09 GMT   |   Update On 2019-12-21 10:09 GMT
ஆண்டிப்பட்டி அருகே காய்கறி வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே ஆலந்தளிர் பகுதியில் இருந்து தேனி சந்தைக்கு காய்கறிகளுடன் வேன் வந்தது. இந்த வேனை முத்தாலம்பாறையை சேர்ந்த பிச்சை மகன் முருகன் ஓட்டி வந்தார்.

இதில் தொழிலாளர்களும் காய்கறிகளுடன் பயணம் செய்தனர். வருசநாடு- கண்டமனூர் சாலையில் அண்ணாநகர் பகுதியில் வந்தபோது திடீரென வேனின் பின் பக்க டயர் வெடித்தது. இதனால் நிலைதடுமாறி ஓடிய வேன் சாலையோரம் கவிழ்ந்தது.

வேனில் பயணம் செய்த கிருஷ்ணன் (வயது35), முத்துக்காளை (65), சுப்பிரமணி (60), சீனி (65) மற்றும் வேன் டிரைவர் முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்து தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தலையில் பலத்த காயம் அடைந்த மற்றொரு முருகன் (38) மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News