செய்திகள்
வீட்டு முன்பு விளையாடிய போது வேன் மோதி 2 வயது குழந்தை பலி
பெரியபாளையம் அருகே வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்த குழந்தை மீது வேன் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே குழந்தை பலியானது.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே வெங்கல் காலனியை பிரசாந்த். இவரது 2 குழந்தை மோகித். இவன் இன்று காலை வீட்டு முன்பு பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கீழே விழுந்த பந்தை எடுப்பதற்காக சாலை அருகே சென்றான். அந்த நேரத்தில் அவ்வழியே சென்ற வேன் திடீரென மோகித் மீது ஏறி இறங்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை மோகித் பரிதாபமாக இறந்தான். விபத்து நடந்ததும் வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலு விசாரணை நடத்தி வருகிறார்.
பெரியபாளையம் அருகே வெங்கல் காலனியை பிரசாந்த். இவரது 2 குழந்தை மோகித். இவன் இன்று காலை வீட்டு முன்பு பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கீழே விழுந்த பந்தை எடுப்பதற்காக சாலை அருகே சென்றான். அந்த நேரத்தில் அவ்வழியே சென்ற வேன் திடீரென மோகித் மீது ஏறி இறங்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை மோகித் பரிதாபமாக இறந்தான். விபத்து நடந்ததும் வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலு விசாரணை நடத்தி வருகிறார்.