செய்திகள்
பெண் தற்கொலை

சாத்தான்குளம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2019-12-16 13:01 GMT   |   Update On 2019-12-16 13:01 GMT
சாத்தான்குளம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்விளையை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி கிருஷ்ணம்மாள்(வயது 50).    சுப்பிரமணியன் கடந்த சில மாதங்களாக வாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணம்மாளுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர்களுக்கு ஒரே மகன் மட்டும் உள்ளார். அவர் சென்னையில் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று தனது கணவருக்கு சாப்பாடு வைத்து கொடுத்துவிட்டு கிருஷ்ணம்மாள் வீட்டின் பின்புறம் உள்ள வாசலில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தட்டார்மடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News