செய்திகள்
இளம்பெண்கள் மாயம்

மதுரை அருகே கல்லூரி மாணவி-இளம்பெண் திடீர் மாயம்

Published On 2019-12-16 10:24 GMT   |   Update On 2019-12-16 10:24 GMT
மதுரையில் மாயமான 2 இளம்பெண்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:

மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை மேலத்தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் ரஞ்சனா (வயது 17). இவர் அங்குள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 14-ந் தேதி கல்லூரிக்கு சென்ற ரஞ்சனா மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதில் ரஞ்சனாவின் தாயார் ஈஸ்வரி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்.

மற்றொரு சம்பவம்...

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள என்.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் கீர்த்தனா (17). கடந்த 14-ந் தேதி வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மகள் மாயமானது குறித்து செல்வராஜ் கீழவளவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வசந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News