செய்திகள்
டி.கல்லுப்பட்டி அருகே பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் நகை-பணம் திருட்டு
டி.கல்லுப்பட்டி அருகே பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்ப்பவர் சங்கரேஸ்வரி (வயது 34). இவர் கணவர் சரவணகுமாருடன், டி.கல்லுப்பட்டியில் வசித்து வருகிறார். இவர்கள் வீட்டை பூட்டி, சாவியை மறைவிடத்தில் வைத்துச் செல்வது வழக்கம்.
இதனை யாரோ நோட்டமிட்டு, சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 4¾ பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர்.
இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.