செய்திகள்
தற்கொலை

ஊத்துக்கோட்டை அருகே மனைவி தற்கொலை- கணவர் கைது

Published On 2019-12-10 06:35 GMT   |   Update On 2019-12-10 06:35 GMT
ஊத்துக்கோட்டை அருகே மனைவி தற்கொலை வழக்கில் கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வாசு. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வசந்தி (வயது 26). இவர்களுக்கு 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த வசந்தி கடந்த அக்டோபர் மாதம் 4-ந் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பென்னாலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து வாசுவை கைது செய்தார். பின்னர் அவரை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News