செய்திகள்
ஊத்துக்கோட்டை அருகே பாம்பு கடித்து தொழிலாளி பலி
ஊத்துக்கோட்டை அருகே பாம்பு கடித்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்துக்கோட்டை:
கடலூர் மாவட்டம் பன்ருட்டி அருகே உள்ள சூரகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் (57). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் ஊத்துக்கோட்டை செல்லி அம்மன் கோவில் எதிரே பழனி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது பாம்பு ஒன்று அவரை கடித்து சென்றுவிட்டது. ஆபத்தான நிலையில் இருந்த கலியனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலியன் பரிதாபமாக இறந்தார்.