செய்திகள்
கோப்புப்படம்

மாதவரத்தில் 4-வது மாடியில் இருந்து விழுந்து ஏ.சி. மெக்கானிக் பலி

Published On 2019-11-30 11:30 GMT   |   Update On 2019-11-30 11:30 GMT
மாதவரத்தில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஏ.சி.மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாதவரம்:

சென்னை அரும்பாக்கம் அன்னை சத்தியா நகர், எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்தவர் பாலசந்திரன் (30). ஏ.சி.மெக்கானிக்.

இவர் மாதவரம் ரெட்டை ஏரி 200 அடி சாலையில் 9 அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது மாடியில் நேற்று இரவு ஏ.சி. எந்திரத்தை சரிபார்த்துக் கொண்டிருந்தார். திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி பாலச்சந்திரன் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கட்டிடத்தில் போதிய பாதுகாப்பு வலை எதுவும் கட்டாமல் கூலி ஆட்கள் வேலை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் பாதுகாப்பு உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News