செய்திகள்
பெண் தற்கொலை

தேனி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை

Published On 2019-11-27 11:12 GMT   |   Update On 2019-11-27 11:12 GMT
தேனி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேவதானப்பட்டி:

பெரியகுளம் அருகில் உள்ள கெங்குவார்பட்டி புஷ்பராணி நகரை சேர்ந்த ரவி மனைவி ஜோதி(35). இவர்களுக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஜோதி வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் சின்னமனூர் அருகில் உள்ள அப்பிபட்டியை சேர்ந்தவர் சுருளிராஜ்(51). இவர் மின்வாரிய அலுவலகத்தில் பில் வசூல் செய்யும் வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதனால் சம்பவத்தன்று பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஓடைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News