search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை இல்லாத ஏக்கம்"

    ஈரோட்டில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் விடுதி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார் வீதியை சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது 46). இவரது மனைவி சத்யா. ஈரோட்டில் உள்ள தனியார் விடுதியில் மேலாளராக பாலசுந்தரம் பணிபுரிந்து வந்தார்.

    இவரது மனைவி சத்யா நசியனூர் வேளாண்மை துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். பாலசுந்தரம்- சத்யா தம்பதிகளுக்கு குழந்தையில்லை. இதனால் பாலசுந்தரம் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று சத்யா வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் பாலசுந்தரம் மட்டும் இருந்துள்ளார். பின்னர் தற்கொலை செய்ய முடிவெடுத்த பாலசுந்தரம் வீட்டில் தூக்குபோட்டு கொண்டார்.

    சத்யாவின் உறவினர் தினேஷ் என்பவர் சத்யா வீட்டுக்கு வந்தார். அவர் கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்.

    அப்போது பாலசுந்தரம் தூக்குமாட்டிக் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பாலசுந்தரத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பாலசுந்தரத்தை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மல்லசமுத்திரம்:

    நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள ராமாபுரம் மேட்டுவளவை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 37), கூலிதொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் தனசேகரன் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்றும் இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தனசேகரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் மல்லசமுத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை இல்லாத ஏக்கத்தில் தனசேகரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×