செய்திகள்
தற்கொலை

செய்துங்கநல்லூரில் மனநிலை பாதிக்கப்பட்டவர் தீக்குளித்து தற்கொலை

Published On 2019-11-27 10:39 GMT   |   Update On 2019-11-27 10:39 GMT
செய்துங்கநல்லூரில் மனநிலை பாதிக்கப்பட்டவர் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:

செய்துங்கநல்லூர் படையாச்சி தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 53). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ராமசாமி கடந்த சில வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மனைவி வெளியில் செல்லாமல் அவரை கவனித்து வந்துள்ளார்.

கடந்த 22-ந் தேதி கடைக்கு செல்வதற்காக செல்வி வெளியே சென்றுள்ளார். அப்போது மனநிலை பாதிக்கப்பட்ட ராமசாமி தனது வீட்டிற்கு பின்புறமாக சென்று மண்எண்ணையை தனது உடவில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து உயிருக்கு போராடிய நிலையில் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News