செய்திகள்
மதுரையில் வியாபாரி வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை
மதுரையில் வியாபாரி வீட்டில் 16 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதூர்:
மதுரை உத்தங்குடி மகாராணி தெருவைச் சேர்ந்தவர் இன்பகுபேந்திரன் (வயது 34). இவர் அதே பகுதியில் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார்.
இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் பீரோவில் இருந்த 16 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர். வீடு திரும்பிய இன்பகுபேந்திரன் கதவு உடைக்கப்பட்டு நகை திருட்டுப்போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
மதுரை உத்தங்குடி மகாராணி தெருவைச் சேர்ந்தவர் இன்பகுபேந்திரன் (வயது 34). இவர் அதே பகுதியில் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார்.
இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் பீரோவில் இருந்த 16 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர். வீடு திரும்பிய இன்பகுபேந்திரன் கதவு உடைக்கப்பட்டு நகை திருட்டுப்போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.