செய்திகள்
தற்கொலை

இரணியல் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை

Published On 2019-11-25 17:03 GMT   |   Update On 2019-11-25 17:03 GMT
இரணியல் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இறந்ததற்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இரணியல்:

இரணியல் அருகே உள்ள குழியூர் சானல்கரை பகுதியை சேர்ந்தவர் ரெத்தினசாமி. இவரது மகள் அனுசுயா (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். சமீபநாட்களாக அனுசுயா தனது பெற்றோரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக அனுசுயா மனவேதனை அடைந்த நிலையிலும் காணப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவர் தனது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதனால் பதறிப்போன பெற்றோர் மகளை பார்த்த போது அனுசுயா வி‌ஷம் குடித்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை தக்கலை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக அனுசுயாவை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அனுசுயா இறந்துவிட்டார். இதுபற்றிய தகவல் இரணியல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இரணியல் போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

மாணவி அனுசுயா வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News