செய்திகள்
பாபநாசம் அருகே விபத்தில் டிரைவர் படுகாயம்
பாபநாசம் அருகே விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே நெடுந்தெரு கிராமத்தில் வசித்து வருபவர் கண்ணன் (வயது50). கார் டிரைவர். இவர் மோட்டார் சைக்கிளில் பண்டாரவாடை மெயின்ரோட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ராஜகிரியை சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவர் கண்ணன் மீது மோதினார்.
இதில் படுகாயம் அடைந்த கண்ணன் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.