செய்திகள்
சிவகாசியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி
சிவகாசியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
விருதுநகர்:
சிவகாசி அருகேயுள்ள அனுப்பன் குளத்தைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் கோபிநாத் (வயது 18). இவர், சாத்தூரில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று கோபிநாத் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.
அனுப்பன்குளம் கண்மாய் கரை பகுதியில் கோபி நாத் சென்றபோது, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் சறுக்கியது. இதில் தவறி கீழே விழுந்த கோபிநாத் பலத்த காயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோபி நாத் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.