செய்திகள்
மதுரையில் காதலுக்கு எதிர்ப்பு- இளம்பெண் தற்கொலை
மதுரையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:
மதுரை முனிச்சாலை பகவத்சிங் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஜெயலட்சுமி (வயது 24). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பாண்டிகுமார் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் ஜெயலட்சுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது.
காதலுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஜெயலட்சுமி வெளியில் செல்வதற்கு கட்டுப்பாடு விதித்தனர்.
இதனால் விரக்தியடைந்த ஜெயலட்சுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.