செய்திகள்
கோப்பு படம்

திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் இளம்பெண்ணை கடத்தி கட்டாய தாலி கட்டிய வாலிபர்

Published On 2019-11-14 11:51 GMT   |   Update On 2019-11-14 11:51 GMT
திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் இளம்பெண்ணை கடத்தி கட்டாய தாலி கட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள அரப்படிதேவன்பட்டியை சேர்ந்தவர் சந்திர சேகரன்(35) கூலித் தொழிலாளி. இவருக்கு திருமலாபுரத்தை சேர்ந்த ராமையா(60) என்பவரது மகளை பெண் கேட்டனர். அதற்கு ராமையா மறுத்தாராம். இந்த நிலையில் சம்பவத்தன்று சந்திரசேகரனும், அவரது தம்பி வீரமணியும் ராமையாவின் வீட்டுக்கு வந்தனர்.

அங்கு வீட்டில் இருந்த ராமையாவின் மகளை கடத்திச்சென்று கட்டாய தாலி கட்டினார். இதை ராமையா மற்றும் அவரது மனைவி ஆகியோர் தடுக்க சென்றனர். உடனே சந்திரசேகரனும், வீரமணியும் அவர்களை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி ஆண்டிப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சந்திர சேகரனை கைது செய்தனர்.
Tags:    

Similar News