செய்திகள்
நகை பறிப்பு

கோவை அருகே மளிகை கடைக்கு சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2019-11-09 10:10 GMT   |   Update On 2019-11-09 10:10 GMT
கோவை அருகே மளிகை கடைக்கு சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை அருகே உள்ள சூலூரை சேர்ந்தவர் சுகுமாறன். இவரது மனைவி சாரதா (59). சம்பவத்தன்று இவர் மளிகை கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த படி வந்த 2 வாலிபர்கள் திடீரென சாரதா கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

கோவை கருமத்தம் பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சுசிலா (34). சம்பவத்தன்று இரவு கோவிந்தசாமி வெளியே சென்று இருந்தார். சுசிலா மட்டும் வீட்டை பூட்டி விட்டு தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது வீட்டில் திடீரென பீரோவை உடைக்கும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுசிலா தனது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

அவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவும் திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த 5 பவுன் நகையை காணவில்லை. அதனை மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து கருமத்தம் பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News