செய்திகள்
கோப்பு படம்

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

Published On 2019-11-07 09:21 GMT   |   Update On 2019-11-07 09:21 GMT
கும்மிடிப்பூண்டி அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கவரைப்பேட்டை அடுத்த மேல்முதலம்பேடு காலனியைச்சேர்ந்தவர் ரம்யா என்கிற ராஜலட்சுமி(20). இவருக்கும் சென்னை ரெட்டேரியைச் சேர்ந்த பெயிண்டர் நாகராஜ்(24) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகு மாமியார் வீட்டிலேயே நாகராஜ் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த ரம்யா திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து ரம்யாவின் தாய் கவுசல்யா மற்றும் கணவர் நாகராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
Tags:    

Similar News