செய்திகள்
சேலத்தில் பள்ளி மாணவன் காய்ச்சலுக்கு பலி - மேலும் 2 போலீஸ்காரர்கள் அனுமதி
சேலத்தில் 4-ம் வகுப்பு பள்ளி மாணவன் மர்ம காய்ச்சலுக்கு பலியான நிலையில் மேலும் 2 போலீஸ்காரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் சொர்ணபுரி போயர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் பத்மநாபன் (வயது 10). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் மர்ம காய்ச்சல் பாதித்த சிறுவனை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பத்மநாபன் நேற்றிரவு பரிதாபமாக இறந்தான். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் மத்திய சிறையில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர்கள் முருகன் (28), சிங்காரம் (33). தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த இவர்கள் இருவருக்கும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து 2 பேரும் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் சொர்ணபுரி போயர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் பத்மநாபன் (வயது 10). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் மர்ம காய்ச்சல் பாதித்த சிறுவனை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பத்மநாபன் நேற்றிரவு பரிதாபமாக இறந்தான். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் மத்திய சிறையில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர்கள் முருகன் (28), சிங்காரம் (33). தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த இவர்கள் இருவருக்கும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து 2 பேரும் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.