செய்திகள்
கோப்பு படம்.

தூத்துக்குடியில் 7 நாட்களுக்கு பின் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்

Published On 2019-11-04 13:24 GMT   |   Update On 2019-11-04 13:24 GMT
தூத்துக்குடியில் கடல் சீற்றம் குறைந்ததையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
தூத்துக்குடி:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியதையடுத்து கடந்த வாரம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. மேலும் குமரிக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடற்கரையோரங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது.
 
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்களும், நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்திருந்தனர். அதிகாரிகளின் ஆணைக்கிணங்க கடந்த 7 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். இந்நிலையில் கடலில் அலைகளின் சீற்றம் குறைந்ததையடுத்து இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

இதையடுத்து இன்று காலை 260 விசைப்படகுகளில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதேபோல் நாட்டுப்படகு மீனவர்களும் அதிக அளவில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
Tags:    

Similar News