செய்திகள்
தற்கொலை

ஆழ்வார்குறிச்சி அருகே இளம்பெண் தற்கொலை

Published On 2019-11-04 13:14 GMT   |   Update On 2019-11-04 13:14 GMT
ஆழ்வார்குறிச்சி அருகே 2 முறை மாப்பிள்ளை பார்த்தும் திருமணம் நிச்சயமாகாததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளம் மேலூரை சேர்ந்தவர் அந்தோணி பாஸ்கர். இவரது மகள் கிறிஸ்டி (வயது25). இவருக்கு 2 முறை மாப்பிள்ளை பார்த்தும் திருமணம் நிச்சயமாக வில்லையாம். பலமுறை திருமணம் தள்ளிப் போனதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட கிறிஸ்டி நேற்று வீட்டில் தனது துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News