செய்திகள்
கீழடியில் ரூ.12 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தின் கீழடியில் 12 கோடி ரூபாய் செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு நாள் விழாவின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:
தமிழ்நாடு என்று பெயரை மாற்றி அண்ணா சாதித்தார். கீழடி அகழாய்வு தமிழர் நாகரீகத்தை உலகிற்கே பறைசாற்றி உள்ளது. சிவகங்கை திருப்புவனம் அருகே உள்ள கொந்தகையில் 12.21 கோடி ரூபாயில் கீழடி அகழாய்வு பொருட்களை கொண்டு உலக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்தார்.