செய்திகள்
கொடுங்கையூரில் கொள்ளையர்கள் 2 பேர் கைது
கொடுங்கையூரில் கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர்:
கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் கோதண்டம் (வயது 80). வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் கடந்த 28-ந் தேதி வீட்டில் தூங்கியபோது பீரோவில் இருந்த 35 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது.
இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொள்ளை தொடர்பாக கொடுங்கையூரை சேர்ந்த அஜித், சத்யமூர்த்தி ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை- பணம் பறிமுதல் செய்யப்பட்டது.