செய்திகள்
கைது

கொடுங்கையூரில் கொள்ளையர்கள் 2 பேர் கைது

Published On 2019-11-01 08:34 GMT   |   Update On 2019-11-01 08:34 GMT
கொடுங்கையூரில் கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர்:

கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் கோதண்டம் (வயது 80). வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் கடந்த 28-ந் தேதி வீட்டில் தூங்கியபோது பீரோவில் இருந்த 35 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொள்ளை தொடர்பாக கொடுங்கையூரை சேர்ந்த அஜித், சத்யமூர்த்தி ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை- பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News