செய்திகள்
கைது

மரக்காணம் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் ரவுடி கைது

Published On 2019-10-31 17:04 GMT   |   Update On 2019-10-31 17:04 GMT
மரக்காணம் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் ரவுடி கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்:

மரக்காணம் தாலுகா டி.நல்லாளம் தைலந்தோப்பு தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 42). ரவுடி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை வழக்கில் பிரம்மதேசம் போலீசார் இவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இவர் மீது கொலை முயற்சி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே அவருடைய குற்றச்செயல்களை தடுக்கும்பொருட்டு அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மகேந்திரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

இதையடுத்து மகேந்திரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் மத்திய சிறையில் இருக்கும் ரவுடி மகேந்திரனுக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News