செய்திகள்
தற்கொலை

நாகரசம்பட்டி அருகே பூச்சி மருந்து குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2019-10-31 16:00 GMT   |   Update On 2019-10-31 16:00 GMT
நாகரசம்பட்டி அருகே பூச்சி மருந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டியை அடுத்துள்ள சுண்டக்காபட்டியை சேர்ந்தவர் ஞானமணி (வயது50). இவர் நேற்று வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். 

இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக ஞானமணி உயிரிழந்தார்.

இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News