செய்திகள்
ஒத்தக்கடை அருகே வலிப்பு நோயாளி ஆற்றில் மூழ்கி பலி
ஒத்தக்கடை அருகே வலிப்பு நோயாளி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரையை அடுத்த ஒத்தக்கடை அருகேயுள்ள சடச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் கண்ணன் நேற்று மாலை நரசிங்கம் ஆற்றுக்கு சென்றார். அங்கு குளித்து கொண்டு இருந்தபோது அவருக்கு வலிப்பு வந்தது. இதனால் ஆற்றுக்குள் விழுந்த கண்ணன் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.