செய்திகள்
விபத்து

வெள்ளகோவில் அருகே விபத்தில் எலக்ட்ரீசியன் பலி

Published On 2019-10-26 09:12 GMT   |   Update On 2019-10-26 09:12 GMT
வெள்ளகோவில் அருகே விபத்தில் எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அடுத்து வஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 32). எலக்ட்ரீசியன். தினமும் வெள்ளகோவில் வரும் சுதாகர் இங்கிருந்து பல இடங்களுக்கு வேலைக்கு சென்று வருவார்.பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்புவார்.

நேற்று இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். வெள்ளகோவில்- மூலனூர் இடையே உள்ள தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் வந்தபோது பஸ்சில் இருந்து இறங்கி அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி கவிதா (39), சதீஷ்குமார் என்பவரின் மனைவி கவிதா (26) ஆகியோர் நடந்து வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சதீஷ்குமார் மனைவி கவிதா மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்தது. பலத்த காயம் அடைந்த சுதாகர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினர். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதாகர் பரிதாபமாக இறந்தார்.

மோட்டார் சைக்கிள் மோதியதில் கவிதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News