செய்திகள்
தாக்கி மிரட்டல்

கரிக்கலாம்பாக்கத்தில் நிலத்தகராறில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் - 4 பேருக்கு வலைவீச்சு

Published On 2019-10-24 11:13 GMT   |   Update On 2019-10-24 11:13 GMT
கரிக்கலாம்பாக்கத்தில் நிலத்தகராறில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயி. இவரது மனைவி சாந்தி. இவர்களது குடும்பத்துக்கும், ஆண்டியார் பாளையத்தை சேர்ந்த சாந்தியின் அண்ணன் சுப்புராயன் குடும்பத்துக்கும் நிலத்தகராறு இருந்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சுப்புராயனை ஏழுமலை கத்தியால் குத்தி விட்டார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தற்போது ஏழுமலை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரு குடும்பத்தினருக்கும் மீண்டும் நிலத்தகராறு ஏற்பட்டது. அப்போது சுப்புராயன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த ரமேஷ், பிரசாந்த், குமரேசன் ஆகிய 4 பேரும் சேர்ந்து சாந்தியை தடியாலும், கையாலும் சரமாரியாக தாக்கினர். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து சாந்தி மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்புராயன் உள்பட 4 பேரையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News