செய்திகள்
விபத்து

ஒரத்தநாடு அருகே விபத்து- கார் மோதி வாலிபர் பலி

Published On 2019-10-24 09:34 GMT   |   Update On 2019-10-24 09:34 GMT
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அடுத்த கண்ணுத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஊத்துக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (38). இவர்கள் இருவரும் தஞ்சையில் உள்ள நகைக்கடையில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வேலை வி‌ஷயமாக பட்டுக்கோட்டைக்கு இருவரும் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஒரத்தநாடு அடுத்த புதூர் கிராமம் அருகே வந்த போது பின்னால் வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுரேஷ், ரவிச்சந்திரன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு எதிரே வந்த லாரிக்கு அடியில் போய் விழுந்தனர். இதில் லாரி சக்கரத்தில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த ரவிச்சந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News