செய்திகள்
கைது

செங்குன்றத்தில் ரவுடி உள்பட 4 பேர் கைது

Published On 2019-10-24 06:04 GMT   |   Update On 2019-10-24 06:23 GMT
செங்குன்றத்தில் ரவுடி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்குன்றம்:

செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கலை சேர்ந்தவர் சேது பிரபல ரவுடி. இவர் தனது மைத்துனர் கொலைக்கு பழி வாங்க எதிர் தரப்பினரை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் செங்குன்றம் இன்ஸ்பெக்டர் வசந்தன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ரவுடி சேது, அவரது கூட்டாளிகள் திருநெல்வேலியை சேர்ந்த குட்ட கார்த்தி, சென்றம்பாக்கம் கவுதம், செங்குன்றம் எம்.ஏ.நகரை சேர்ந்த தேவராஜ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News