செய்திகள்
மதுரையில் கடைக்குள் புகுந்து கொள்ளை
மதுரையில் கடையின் மேற்கூரையை பிரித்து ரூ.10 ஆயிரத்து 500-ஐ மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் தொடர்பாக விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை டி.ஆர்.ஓ. காலனி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கலீல் ரகுமான் (வயது 43). இவர் வடக்கு வெளி வீதியில் ஆட்டோ கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் கடையை மூடிச் சென்றார். மறுநாள் காலை கடைக்கு வந்த கலில் ரகுமான், மேற்கூரை பிரிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
யாரோ மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து ரூ.10 ஆயிரத்து 500-யை திருடிச் சென்று விட்டதாக போலீசில் கலீல் ரகுமான் புகார் செய்தார்.
விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்குள் புகுந்து திருடிய மர்ம மனிதனை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை டி.ஆர்.ஓ. காலனி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கலீல் ரகுமான் (வயது 43). இவர் வடக்கு வெளி வீதியில் ஆட்டோ கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் கடையை மூடிச் சென்றார். மறுநாள் காலை கடைக்கு வந்த கலில் ரகுமான், மேற்கூரை பிரிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
யாரோ மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து ரூ.10 ஆயிரத்து 500-யை திருடிச் சென்று விட்டதாக போலீசில் கலீல் ரகுமான் புகார் செய்தார்.
விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்குள் புகுந்து திருடிய மர்ம மனிதனை போலீசார் தேடி வருகின்றனர்.