செய்திகள்
மாயம்

தக்கலை அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்

Published On 2019-10-21 10:17 GMT   |   Update On 2019-10-21 10:17 GMT
தக்கலை அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயமானார். இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

இரணியல்:

தக்கலையை அடுத்த கொற்றியோடு அருகே உள்ள மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஆல்பன் (வயது 30). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் ஆல்பன் ஊருக்கு வந்திருந்தார். அதன் பிறகு மீண்டும் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு அவர் ஏற்பாடுகள் செய்தார். அதன்படி கடந்த 19-ந் தேதி விமானம் மூலம் வெளிநாடு செல்வதற்காக திருவனந்தபுரம் சென்றார்.

அப்போது வீட்டில் இருந்த அவரது தாயார் ஆல்பனுக்கு போன் செய்து பேசினார். ஆல்பனின் மனைவி ஷெர்லின்லின்சி (24). தனது ஒரு வயது குழந்தையுடன் மாயமாகி விட்டதாக அவர் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆல்பன் ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தையை தேடினார். உறவினர்கள் வீடு, தோழிகள் வீடுகளில் தேடியபோதும் அவர்கள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் குழந்தையுடன் மனைவி மாயமானது பற்றி கொற்றியோடு போலீசில் ஆல்பன் புகார் செய்தார்.

இதுபற்றி கொற்றியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், சப்-இன்ஸ் பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து குழந்தையுடன் மாயமான ஷெர்லின்லின்சியை தேடி வருகிறார்கள்.

இரணியல் அருகே காரங்காடு பகுதியை சேர்ந்தவர் சமுத்திரபாண்டியன். இவரது மகள் சங்கீதா (20).

சம்பவத்தன்று தாயார் கடைக்குச் செல்வதாக சங்கீதாவிடம் கூறிவிட்டு வெளியில் சென்றார். அவர் வீடு திரும்பிய போது சங்கீதா மாயமாகி இருந்தார். மகளை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான சங்கீதாவை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News