செய்திகள்
தற்கொலை

திருச்செந்தூர் அருகே தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை

Published On 2019-10-20 16:10 GMT   |   Update On 2019-10-20 16:10 GMT
திருச்செந்தூர் அருகே குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள நா.முத்தையாபுரம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சோனியா (28).  இவர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, 2 குழந்தைகள் உள்ளனர்.  

இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப தகராறு இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து இவரது மனைவி கடந்த 4 வருடத்திற்கு முன்பு கோபித்துக்கொண்டு தனது 2 குழந்தைகளுடன் கோவையில் தங்கி குடும்பம் நடத்தி வருகிறார்.  

சுரேஷ் மட்டும் தனியாக இருந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் திருச்செந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News