செய்திகள்
கொள்ளை

ஏம்பலம் அருகே அரசு பஸ் டிரைவரை மிரட்டி நகை- பணம் பறிப்பு

Published On 2019-10-18 13:26 GMT   |   Update On 2019-10-18 13:26 GMT
ஏம்பலம் அருகே அரசு பஸ் டிரைவரை மிரட்டி நகை - பணத்தை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
வில்லியனூர்:

அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ராமு (வயது 58). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இவர் மடுகரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஏம்பலம் அருகே மணக்குப்பம் என்ற இடத்தில் வந்த போது ஒரே மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 3 பேர் திடீரென ராமுவை வழிமறித்தனர். 

பின்னர் அவர்கள் ராமுவை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.45 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் ராமு கையில் அணிந்திருந்த 2 கிராம் தங்க மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து நகை - பணத்தை பறிகொடுத்த ராமு இதுகுறித்து மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து நகை - பணத்தை பறித்து சென்ற 3 பேரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News