செய்திகள்
பாம்பு

ஆலங்குளம் அருகே பாம்பு கடித்து சிறுமி பலி

Published On 2019-10-17 13:09 GMT   |   Update On 2019-10-17 13:09 GMT
ஆலங்குளம் அருகே பாம்பு கடித்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலங்குளம்:

ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை அருகே உள்ள மருத்தாத்தாள்புரம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் அஜிதா. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களாக நெல்லை மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. 

சம்பவத்தன்று மழை தொடர்ந்து அப்பகுதியில் அதிகமாக மழை பெய்ததால் அவரது வீட்டில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் இந்த தண்ணீருடன் சேர்ந்து பாம்பு ஒன்றும் அவர்களது வீட்டுக்குள் நுழைந்துள்ளது. பாம்பானது அங்கு நின்றுகொண்டு இருந்த அஜிதாவை கடித்தது.

இதில் மயங்கிய நிலையில் இருந்த அந்த சிறுமியை பெற்றோர்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News