செய்திகள்
நகை பறிப்பு

மேற்கு மாம்பலத்தில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

Published On 2019-10-08 06:42 GMT   |   Update On 2019-10-08 06:42 GMT
மேற்கு மாம்பலத்தில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனி 4-வது தெருவைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி உமையாள் (40). இவர் நேற்று வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் உமையாள் அணிந்திருந்த 4 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். 

இதுகுறித்து அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News